மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞரணி சார்பில் கொரோனா வைரஸ் தடுக்க கசாயம் விநியோகம்.
 

 

மதுராந்தகம் 

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர்

ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் அருள்வாக்கின்படி அன்னை ஆதிபராசக்தி இளைய தெய்வம் கோ.ப.செந்தில்குமார் அருள்திரு அம்மா அவர்களின் அன்பருளாசியுடன் ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு,மிளகு, திப்பிலி, கொத்தமல்லி,புதினாநாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு ஆகியவை சேர்த்து அந்த ஒரு லிட்டர் தண்ணீர் அரை லிட்டர் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைத்து பின்பு அதனை வடிகட்டி பருக வேண்டும். 

இம்முறையில் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைவருக்கும் இந்த கஷாயமானது வழங்கப்பட்டு வருகிறது

இதனை உலகெங்கும் உள்ள ஆன்மிக இயக்கம் மற்றும் இளைஞரணி தொண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். 

இந்த முகாமை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி குழு இயக்கத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.