மதுரை
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பிரதமர் மோடி பெயரில் போலியான முகநூல் அஞ்சல் அனுப்பியுள்ளனர்.
இதில் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக உங்களுக்கு ஒரு வேண்டுகோள் பல்கலைக்கழகத்தை உடனடியாக மூட வேண்டும் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி மூட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
கொரானா கோகே கொரானா 19 லீவ் கே என குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா . மதுரை காமராஜர் பல்கலை கழக துணை வேந்தருக்கு பிரதமர் நரேந்திர மோடி பெயரில்
போலியான முகநூலில் அஞ்சல் வந்துள்ளது. இதன்படி கொரானா வைரஸ் தாக்குதல் இருப்பதால் பல்கலைக்கழகத்தை உடனடியாக மூடுமாறு கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் (பொறுப்பு ) அளித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.நாடு முழுவதும் கொரானா வைரஸ் குறித்து அச்சத்துடன் இருக்கையில்
பிரதமர் மோடி பெயரில் போலி முகநூல் அஞ்சல் மூலம் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தை மூட அனுப்பியது பரபரப்பாக உள்ளது.