துறையூர்,
துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டசத்து விழிப்புணர்வு இரு வார
விழா நடைபெற்றது.
விழாவில், ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் சரண்யா மோகன் தாஸ் தலைமை வகித்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஊட்டச்சத்து அவசியங்களை எடுத்துக்கூறினார்.சத்தான உணவுகளை உண்பதால் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் வட்டார ஊராட்சி வளர்ச்சி அலுவலர் குணசேகரன் , கிராம ஊராட்சி அலுவலர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை திட்ட அலுவலர் ஹாகித்தா ரிஜிவானா வட்டார ஒருங் கிணைப் பாளர்
ராஜா, மேற்பார்வையாளர் கிருஷ்ணவேணி மற்றும் ஸ்டெல்லாமேரி உட்பட ஊராட்சி மன்ற பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்